நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 601 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 601 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jan 2022 4:24 PM GMT (Updated: 29 Jan 2022 4:24 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 601 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 601 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
601 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 63,363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 13 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலில் இருந்து பிற மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,350 ஆக ஆனது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 601 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,951 ஆக உயர்ந்தது.
431 பேர் குணமாகினர்
நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 431 பேர் கொரோனாவில் இருந்து குணமாகினர். இதனிடையே இதுவரை கொரோனாவுக்கு 525 பேர் பலியாகி இருந்த நிலையில், இதுவரை 58,486 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 4,940 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story