கடையம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கடையம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jan 2022 10:50 PM GMT (Updated: 30 Jan 2022 10:50 PM GMT)

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்

கடையம்:
கடையம் அருகே தெற்கு மடத்தூர்- காவூர் விலக்கு பகுதியில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தினர். இதையடுத்து வாகனத்தில் இருந்து டிரைவர் மற்றும் கிளீனர் இறங்கி தப்பி ஓடினர். பின்னர் சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தை கைப்பற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story