மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் தலையாரி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் தலையாரி பலி
x
தினத்தந்தி 30 Jan 2022 11:11 PM GMT (Updated: 30 Jan 2022 11:11 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் தலையாரி பரிதாபமாக இறந்தார்

நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் சரவணமுத்து (வயது 55). இவர் குலவணிகர்புரம் தலையாரியாக உள்ளார். நேற்று காலை நெல்லை அருகே உள்ள பாலாமடையில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனது உறவினரான குறிச்சியை சேர்ந்த பசுங்கிளி (61) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிள் நெல்லை அருகே உள்ள குறிச்சி குளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த கார் எதிர்பாராதவிதமாக சரவணமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சரவணமுத்து பலத்த காயம் அடைந்தார். பசுங்கிளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சரவணமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story