ரூ.3 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.3 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:45 PM GMT (Updated: 31 Jan 2022 4:45 PM GMT)

ரூ.3 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கேயம்:
காங்கேயம் நகரம் கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 8 விவசாயிகள் 70 மூட்டைகள் (3,433 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த 2 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.10 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.91-க்கும், குறைந்தபட்சமாக ரூ.77-க்கும், சராசரியாக ரூ.90-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்

Next Story