தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
சென்னை,
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெற்றது.
அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று மறுவாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்நிலையில் சூலூர் தொகுதியில் - 79.41% வாக்குகளும், அரவக்குறிச்சி தொகுதியில் - 84.28% வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில்- 74.17% வாக்குகளும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் - 72.61% வாக்குகளும் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெற்றது.
அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று மறுவாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்நிலையில் சூலூர் தொகுதியில் - 79.41% வாக்குகளும், அரவக்குறிச்சி தொகுதியில் - 84.28% வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில்- 74.17% வாக்குகளும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் - 72.61% வாக்குகளும் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story