பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை சரமாறியாக அடித்து உதைத்த மாணவர்கள்


பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை சரமாறியாக அடித்து உதைத்த மாணவர்கள்
x
தினத்தந்தி 2 Jun 2018 12:06 PM GMT (Updated: 2 Jun 2018 12:06 PM GMT)

மராட்டியத்தில் பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை சகமாணவர்கள் ஆசிரியரை சரமாறியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக்கில் இயங்கி வரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், பள்ளியில் பயிலும் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆசிரியர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து சக நண்பர்களிடம் கூறியுள்ளார். 

இதனை அறிந்து ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த ஆசிரியரை சரமாறியாக அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களிடம் இருந்து ஆசிரியரை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

Next Story