நிபா காய்ச்சலை அடுத்து கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற புது வகை காய்ச்சல் நோய் அபாயம்


நிபா காய்ச்சலை அடுத்து கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற புது வகை காய்ச்சல் நோய் அபாயம்
x
தினத்தந்தி 7 Jun 2018 12:04 PM GMT (Updated: 7 Jun 2018 12:04 PM GMT)

நிபா காய்ச்சலை அடுத்து கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற புது வகை காய்ச்சல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. #BlackFever #Nipahvirus

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் நிபா எனும் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.  இந்த நோய் தாக்குதலுக்கு இதுவரை 18 பேர்   உயிரிழந்துள்ளனர். 

தற்போது கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வயிற்று வலி மற்றும் கல்லீரல் வீக்கம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு மண் பூச்சிகளால் பரவும் புது வகை காய்ச்சலான கருப்பு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி அவரை திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருப்பு காய்ச்சல் போன்ற நோய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் திருச்சூர், மலப்பூரம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story