இந்துத்துறவி ராமானுஜருக்கு 216 அடி உயர வெண்கல சிலை


இந்துத்துறவி ராமானுஜருக்கு 216 அடி உயர வெண்கல சிலை
x
தினத்தந்தி 2 July 2018 9:26 AM GMT (Updated: 2 July 2018 9:26 AM GMT)

ஐதராபாத்தில் இந்துத்துறவியான ராமானுஜருக்கு, 216 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்துமதத் துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துத் துறவியான ராமானுஜர் என்கிற ராமானுஜ சாரியா, தமிழகத்தில் பிறந்தவர். கருணைக்கடல் என்று அழைக்கப்படும் இவர், உலகமெங்கும் சமத்துவம் பரவ பாடுபட்டவர்.

இவருக்கு, ஐதராபாத் அருகே ஷாம்ஷாபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வெண்கலத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு துவங்கிய இந்தப் பணிகள், தற்போது 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய சிலையாக இது கருதப்படுகிறது. தாய்லாந்தில் 302 அடி உயரமுள்ள புத்தர் சிலையே, உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராமானுஜ சாரியாவின் சிற்பம், மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாக குழுவில் உள்ள தேவானந்த ராமானுஜா ஜீயர் தெரிவித்தார்.


Next Story