ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி; பெட்ரோல்-டீசல் செஸ் வரி உயர்வு: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு


ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி; பெட்ரோல்-டீசல் செஸ் வரி உயர்வு:  கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு
x

கர்நாடக பட்ஜெட்டில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி மற்றும் பெட்ரோல்-டீசல் செஸ் வரி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூர்

கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரம் வருமாறு:-

* கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* பெட்ரோல் மீதான வரி விகிதம் தற்போது 30% லிருந்து 32% ஆகவும், டீசல் 19% ல் இருந்து 21% ஆகவும் உயர்த்தப்படுகிறது
இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு  ரூ .1.14 ,  டீசல்  லிட்டருக்கு ரூ 1.12  அதிகரிக்கும்.

* இஸ்ரேல் பாணியில் வறண்ட நிலத்தில் பாசனம், விளைச்சலை ஊக்கப்படுத்த, வறண்ட பகுதிகளான கோலார், சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.150 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பெங்களூருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மேகதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டப்படும். மத்திய அரசு அனுமதியளித்ததும், அணை கட்டும் பணிகள் துவங்கப்படும்.

* 2,18,488 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்துள்ளார்.

Next Story