டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோவிலை பார்வையிட்டார் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்


டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோவிலை பார்வையிட்டார் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்
x
தினத்தந்தி 8 July 2018 4:08 PM GMT (Updated: 8 July 2018 4:08 PM GMT)

டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோவிலை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் பார்வையிட்டார். #MoonJae-in #Akshardhamtemple

புதுடெல்லி,

4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்  மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவினரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். 

தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் மூன் ஜே-இன்-னுக்கு வரும் 10-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரபேற்பு அளிக்கப்படுகிறது.  அன்று மாலை விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தும் தென்கொரியா அதிபர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது. 

இந்தநிலையில்  டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோவிலை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் பார்வையிட்டார்.  மூன் ஜே-இன் இன்று முதல் 11-ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story