சில்சார் விமான நிலையத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் குழு திரும்பியது
![சில்சார் விமான நிலையத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் குழு திரும்பியது சில்சார் விமான நிலையத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் குழு திரும்பியது](https://img.dailythanthi.com/Articles/2018/Aug/201808031106075393_After-overnight-detention-jostling-at-Silchar-airport-TMC_SECVPF.gif)
சில்சார் விமான நிலையத்தில் இருந்து தடுப்புகாவலில் வைக்கப்பட்டு இருந்த திரிணாமுல் காங்கிரஸ் குழு திரும்பியது.
சில்சார்,
வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டனர். சுமார் 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டுள்ளனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் என்ஆர்சி பட்டியல் வெளியான பிறகு உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் அசாம் வந்தனர். அவர்கள் அனைவரும் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விமான நிலையத்திலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ் குழுவினரை தடுத்து நிறுத்தியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தடுப்பை மீறிய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி ஒருவரை போலீசார் துரத்தி பிடித்தனர். அது குறித்த போட்டா காட்சியும் வெளியானது. போலீசார் தாக்கியதால் அந்த பெண் எம் எல்.ஏ காயமடைந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
அசாம் மாநிலத்திற்குள் நுழைவதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தங்கியிருந்தனர். அவர்களில் 6 பேர் இன்று காலை அசாமிலிருந்து புறப்பட்டனர். எம்.பி.க்கள் மம்தாபால தாகூர், அர்பிதா கோஷ் ஆகியோர் பின்னர் புறப்பட்டு சென்றார்கள்.
#WATCH: TMC’s Mahua Moitra seen assaulting lady constable who tried to restrain Mahua Moitra after TMC leaders were stopped at Silchar Airport. Constable received injuries. #NRCAssampic.twitter.com/FJjNQ77ngO
— ANI (@ANI) August 2, 2018
Related Tags :
Next Story