3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அருண் ஜெட்லி


3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 9 Aug 2018 8:09 AM GMT (Updated: 9 Aug 2018 8:24 AM GMT)

உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்று வந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லி 3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றார். #ArunJaitley

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரியும் மாநிலங்களவை பாஜக தலைவருமான அருண் ஜெட்லி சிறுநீரகப்பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கடந்த மே 14-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இந்த காலகட்டத்தில் அவரிடம் இருந்த நிதித்துறை, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின்னர் 2 மாத ஓய்வுக்கு பிறகு இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத்தலைவருக்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டார். 

வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங்க்கு அருண் ஜெட்லி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Next Story