ரெயிலில் நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு


ரெயிலில் நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு
x
தினத்தந்தி 30 Sep 2018 6:22 PM GMT (Updated: 30 Sep 2018 6:22 PM GMT)

பீகாரில், ரெயிலில் நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.

பீகார்,


பீகார் மாநிலம் முகல்சிரல் கோட்டத்துக்கு உட்பட்ட தெஹ்ரி ஆன் சோனே ரெயில்நிலையத்தில், பலமு–சிங்க்ரவுலி இணைப்பு ரெயில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு தூய்மைப்பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தது. ரெயில்வே துப்புரவு தொழிலாளர்கள் ரெயில்பெட்டியை சுத்தம் செய்தனர்.

அப்போது பொதுபெட்டியை சுத்தம் செய்தபோது, அங்கிருந்த கழிவறையின் அருகில் மர்மப்பெட்டி ஒன்று இருந்தது. இதனை ரெயில்வே போலீசார் திறந்து பார்த்தனர். அதில் இறந்த நிலையில் பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் இருந்தது. பிளாஸ்டிக் பைகளை கொண்டு உடல் சுற்றப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட பெண் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



Next Story