சுப்ரீம் கோர்ட்டில் ஆதார் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு


சுப்ரீம் கோர்ட்டில் ஆதார் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு
x
தினத்தந்தி 24 Dec 2018 11:00 PM GMT (Updated: 24 Dec 2018 10:35 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் ஆதார் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆதார் கார்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆதார் சட்டத்தில் தனிநபர் உரிமையை மீறும் வகையில் எதுவும் இல்லை என்று தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல ஆதார் திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து மறுஆய்வு செய்யக்கோரி இம்தியாஸ் அலி பல்சானியா என்பவரும் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


Next Story