பூரி ஜெகநாதர் கோவிலில் சிறுமியிடம் சில்மிஷம் போலீஸ்காரர் கைது
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமி தனது பெற்றோருடன் நேற்று புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்றார்.
பூரி,
கோவிலில் தடுப்பு கம்பிகளுக்கு இடையே வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர். அப்போது அவர்களுக்கு பின்னால் நின்ற போலீஸ்காரர் ஒருவர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டார்.
இதுபற்றி அந்த சிறுமி சிங்கட்வார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த போலீஸ்காரரை பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் கூறினார். போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கைது செய்தனர். பின்னர் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அந்த கோவிலில் நேற்று முன்தினம் ஊழியர் ஒருவரை போலீஸ்காரர் தாக்கியதாக கூறி கோவில் வாசல்கள் சுமார் 12 மணி நேரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story