ரூ.2,600 கோடி மோசடி; தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை
மேற்கு வங்காளத்தில் ரூ.2,600 கோடி அளவிற்கு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் தொழிலதிபராக இருப்பவர் நிலேஷ் பரேக். இவர் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் ஏற்றுமதிகளுக்கான நகைகளை தயாரிப்பதற்காக கடன் வாங்கி உள்ளார். அவர் இதுபோன்று ரூ.2,600 கோடி அளவிற்கு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அவற்றை திருப்பி செலுத்தவில்லை.
இந்த நிலையில், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. அவரது சொத்துகள் முடக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story