டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்


டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்
x
தினத்தந்தி 18 Feb 2019 8:45 PM GMT (Updated: 18 Feb 2019 7:24 PM GMT)

டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965 பேராக உயர்ந்து உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 6 பேர் பன்றி காய்ச்சல் நோயால் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதார பணிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசின் 2 மருத்துவமனைகளிலேயே 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே டெல்லிவாசிகள் பீதியில் உறைந்துள்ளன.

Next Story