காஷ்மீரில் வங்கிக்கு சொந்தமான வாகனம் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி


காஷ்மீரில் வங்கிக்கு சொந்தமான வாகனம் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி
x
தினத்தந்தி 5 Nov 2019 2:55 AM GMT (Updated: 5 Nov 2019 2:55 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் பணத்தை எடுத்துச் சென்ற போது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று கத்துவா பகுதியில் இருந்து பானி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் வங்கிக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது.

விக்ரம் சிங் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தார். இரண்டு பாதுகாவலர்கள் மற்றும் ஒரு வங்கி கணக்காளர் ஆகியோர் வாகனத்தில் இருந்தனர்.

இந்த வாகனம் கர்டூ மோர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு குறுகிய வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயெ பலியாகினர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், வாகனத்தில் இருந்த பணம் பத்திரமாக மீட்கப்பட்டு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story