இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை
x
தினத்தந்தி 27 Nov 2019 3:25 PM GMT (Updated: 27 Nov 2019 3:25 PM GMT)

நாளை முதல் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.

சென்னை,

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் 16 ஆம் தேதி நடந்தது இதில் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோரும் போட்டியிட்டனர். 

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி டுவிட்டர் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இந்தியா இலங்கைக்கு இடையிலான கலாச்சார, வரலாற்று நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே நாளை முதல் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்.  இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.

Next Story