காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்


காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்
x
தினத்தந்தி 4 Dec 2019 12:15 PM GMT (Updated: 4 Dec 2019 12:15 PM GMT)

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டும் யூனியன் பிரதேசங்களாக முறைப்படி செயல்படத் துவங்கியது. தற்போது, துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தின் கீழ் இரண்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு ,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  துணை ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இணையதள முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அங்கு பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த நிலையில்,  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சுமார் 5 மாதங்கள்  ஆகியுள்ள நிலையில் காஷ்மீரில் வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதையடுத்து, கூடுதலாக அனுப்பப்பட்ட வீரர்கள்  திரும்ப  அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது, சுமார் 4 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி தங்கள் முகாமிற்கு திரும்பினர். வரும் நாட்களில், கூடுதலாக அனுப்பப்பட்ட வீரர்கள் முழுவதுமாக திரும்பபெறப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story