அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு


அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Jan 2020 4:01 PM GMT (Updated: 26 Jan 2020 4:01 PM GMT)

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பதாக அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டபேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசு தினமான இன்று டெல்லி கொண்டா தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

இதையடுத்து அமித்ஷா பேசிய போது, “டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு அரசாங்கம் நீர் தூய்மையில் முதலிடத்திலும், மற்றொரு அரசாங்கம் சாலை கட்டுமானத்திலும், வேறு சில மின்மயமாக்கலிலும் முதலிடத்திலும் உள்ளன. 

ஆனால் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் பெறுவதைத் தவிர வேறு எதிலும் முதன்மை பெறவில்லை” என்று கூறினார்.

Next Story