காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2020 4:39 AM GMT (Updated: 22 Feb 2020 4:39 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என ராணுவத்திற்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story