சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்- ஐசிஎம்ஆர்


சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்- ஐசிஎம்ஆர்
x
தினத்தந்தி 27 April 2020 11:14 AM GMT (Updated: 27 April 2020 11:14 AM GMT)

ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் நிலையைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக, சீனாவில் உள்ள வோன்ஃபோ பையோடெக், லிவ்ஸன் டயக்னாஸ்டிக் ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகள் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை கொள்முதல் செய்தன.

ஆனால், இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளின் தரம் குறித்து மாநில அரசுகள் சந்தேகங்கள் எழுப்பின. மாறுபட்ட தரவுகளை காட்டுவதாக மாநில அரசுகள் கூறியது. இதையடுத்து, ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியது.

 இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை மேலும் கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும்,  மேற்கூறிய இரு நிறுவனங்களிடம் வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை திருப்பி அனுப்புமாறும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.  கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும்  மிக சிறந்தது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

2 சீன நிறுவனங்களிடமிருந்தும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. 

Next Story