மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி


மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 29 Jun 2020 4:18 PM GMT (Updated: 29 Jun 2020 4:18 PM GMT)

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 5257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை எட்டியே உயர்ந்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல மராட்டியத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது.

இந்நிலையில் இன்று ஒரேநாளில் 5257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 69ஆயிரத்து 883 பேரை கொரோனா தாக்கி உள்ளது. மேலும்  73298 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 181பலியாகி உள்ளனர்.இதன்மூலம் பலியானவர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 610 ஆகி உள்ளது.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதுய்.

Next Story