எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி
x
தினத்தந்தி 28 July 2020 4:29 PM GMT (Updated: 28 July 2020 4:29 PM GMT)

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்து மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  கடந்த சில தினங்களாக பாகிஸ்தானின் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இன்று பிற்பகலில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள  எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியான மாச்சல்&குகல்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. மோர்டார்கள் பிற ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.


Next Story