ஆந்திராவில் இன்று மேலும் 10,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று மேலும் 10,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 5 Sep 2020 3:07 PM GMT (Updated: 5 Sep 2020 3:07 PM GMT)

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 10,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 10,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,87,331 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 71 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,347 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 1,00,880 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 11,941 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 3,82,104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story