ஆந்திராவில் இன்று 1,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று 1,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 20 Nov 2020 2:51 PM GMT (Updated: 20 Nov 2020 2:51 PM GMT)

ஆந்திர மாநிலத்தில் இன்று 1,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 1,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,57,037 ஆக அதிகரித்துள்ளது.

அந்திர மாநிலத்தில் இதுவரை 6,920 பேர் கொரொனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8,34,735 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 15,382 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story