இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கருக்கு சரத் பவார் அறிவுரை


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கருக்கு சரத் பவார் அறிவுரை
x
தினத்தந்தி 6 Feb 2021 6:51 PM GMT (Updated: 6 Feb 2021 6:51 PM GMT)

மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என சரத் பவார் கூறியுள்ளார்.

மும்பை,

விவசாயிகள் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரும் இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். சச்சினின் இந்த டுவிட்களுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.  

இந்த நிலையில்,  மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சரத் பவார், "விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும்” என்றார். 


Next Story