பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது- ரிசர்வ் வங்கி


பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது- ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 28 May 2021 9:23 AM GMT (Updated: 28 May 2021 9:23 AM GMT)

இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும்  இருப்பினும் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

2021 மார்ச் மாதத்தில் 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் 85 புள்ளி 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 83 புள்ளி 4 சதவீதமாக இருந்தது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை  எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது,. 2021 மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக பணப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 17 புள்ளி3 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இது 2020ல் 22 புள்ளி 6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story