பராமரிப்பு பணி: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்


பராமரிப்பு பணி: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 21 Sep 2021 11:50 PM GMT (Updated: 21 Sep 2021 11:50 PM GMT)

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் காயங்குளம்-திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை - பெரிநாடு இடையே ரெயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ரெயில் போக்குவரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, 28-ந் தேதி புறப்படும் பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06792) காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதுபோல், 25-ந் தேதி புறப்படும் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06127), கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story