ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2021 8:22 PM GMT (Updated: 23 Sep 2021 8:22 PM GMT)

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 13,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,43,244 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இதுவரை 14,108 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 13,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 20,15,387 பேர் குணமடைந்துள்ளனர். 

Next Story