ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு; மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்தார்.
சென்னை,
‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்தவகையில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும், ‘நீட்’ தேர்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் வழங்கினார்.
மாணவர்களின் உயிரையும், கனவுகளையும் பறிக்கும், #நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் எழுதிய கடிதத்தையும், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஒடிசா மாநில முதலமைச்சர் திரு. @Naveen_Odisha அவர்களிடம் வழங்கினேன். (1/2) pic.twitter.com/XQ4bICXsis
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 13, 2021
Related Tags :
Next Story