அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து - 5 பேர் பலி
மராட்டியத்தில் அதிவேகமாக வந்த டேங்கர் லாரி முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ரசாயன பொருளை ஏற்றுக்கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று மராட்டிய மாநிலம் புனே நோக்கி சென்றுகொண்டிருந்தது.
புனேவின் நவாலி பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரி முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 10 முதல் 15 வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பெரும் விபத்தில் முன்னே சென்ற வாகனங்களில் பயணித்தவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த அனைவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story