தொடர்மழை எதிரொலி; பெங்களூருவில் 1 முதல் 10 வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


தொடர்மழை எதிரொலி; பெங்களூருவில் 1 முதல் 10 வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 18 Nov 2021 4:12 PM GMT (Updated: 18 Nov 2021 4:12 PM GMT)

கர்நாடகாவின் பெங்களூருவில் தொடர்மழையை முன்னிட்டு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.



பெங்களூரு,

தமிழகம், ஆந்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழையை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலையை அடைந்து உள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் தொடர் கனமழையை முன்னிட்டு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், அங்கன்வாடிகள், மழலையர் பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் மஞ்சுநாத் அறிவித்து உள்ளார்.


Next Story