தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள விமான உணவகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்த நபரிடம் இருந்து தலா ஒரு கிலோ எடையுள்ள 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர, தலா 100 கிராம் எடையுள்ள 2 தங்க தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு ரூ.1.09 கோடி ஆகும். தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story