தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்


தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Nov 2021 9:30 PM GMT (Updated: 29 Nov 2021 9:30 PM GMT)

தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.



ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள விமான உணவகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்த நபரிடம் இருந்து தலா ஒரு கிலோ எடையுள்ள 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இதுதவிர, தலா 100 கிராம் எடையுள்ள 2 தங்க தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மதிப்பு ரூ.1.09 கோடி ஆகும்.  தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story