பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளிக்கு 106 ஆண்டுகள் சிறை - கேரள கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 May 2022 7:40 PM GMT (Updated: 10 May 2022 7:40 PM GMT)

பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.


திருவனந்தபுரம், 

கேரளாவை சேர்ந்த ரப்பர் தொழிலாளி ஒருவர் தனது 12 வயது மகளை மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது. பலமுறை அவர் மானபங்கம் செய்ததால் கடந்த 2017-ம் ஆண்டு அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார்.

அப்போதுதான் அவரது தந்தை சிறுமியை மானபங்கம் செய்தது வெளியுலகத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கேரளாவில் உள்ள விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார், பெற்ற மகளை மிரட்டி பலமுறை கற்பழித்த தொழிலாளிக்கு 106 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.17 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

Next Story