மராட்டியம்: சிவசேனா சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்; நாளை நேரில் ஆஜராக உத்தரவு


மராட்டியம்: சிவசேனா சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்; நாளை நேரில் ஆஜராக உத்தரவு
x

மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக அதிருப்தி 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.

இதனிடையே, கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதன காரணமாக மராட்டிய அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மராட்டிய எம்.பி.யும், சிவசேனா செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. நிலமோசடி வழக்கில் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவதிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில் உத்தவ் தாக்கரே ஆதரவாளரான சஞ்சய் ராவத் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.

தற்போது, சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ள சம்பவம் மராட்டிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க... மராட்டிய அரசு பெரும்பான்மை இழந்து விட்டது; ஏக்னாத் ஷிண்டே


Next Story