பிப்ரவரி 18 ஆம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்


பிப்ரவரி 18 ஆம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்
x

கோப்புப்படம்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி கூடுகிறது.

புதுடெல்லி,

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் பிப்ரவரி 18ம் தேதி கூடுகிறது. நடைபெற உள்ள 49வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தவிர, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நடைபெற உள்ள 49வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தவிர, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-ஆவது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-இல் நடைபெற்றது. அப்போது விவாதிப்பதற்காக மேற்கண்ட 3 அறிக்கைகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், போதிய நேரம் இல்லாத காரணத்தால், அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story