குஜராத்தில் அணையில் மூழ்கி சேர்ந்த 5 பேர் பலி


குஜராத்தில் அணையில் மூழ்கி சேர்ந்த 5 பேர் பலி
x

கோப்புப்படம்

குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஜாம்நகர்,

குஜராத்தின் ஜாம்நகரில் சப்தா என்ற மிகப்பெரிய அணை உள்ளது. விடுமுறை நாட்களில் உள்ளூரில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த அணைக்கு சுற்றுலா வருவது வழக்கம்.

நேற்று ஜாம்நகரை சேர்ந்த சிலர் சப்தா அணைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் அணையில் விழுந்து மூழ்கினர். இதில் அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் மகேஷ் மங்கே (42), அவரது மனைவி லீனாபென் (40), அவர்களது மகன் சித்தார்த் (19), மற்றும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்களான அனிதா தாமா (40) மற்றும் அவரது மகன் ராகுல் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story