இமாச்சல பிரதேசத்தில் திடீர் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 5 பேர் மாயம்


இமாச்சல பிரதேசத்தில் திடீர் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 5 பேர் மாயம்
x

கட்டிடம் இடிந்து விழுந்ததில் குல்தீப்குமார் என்பவரின் குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி வெள்ளத்தில் மாயமாகினர்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சோலன் மாவட்டத்தின் ஆவுலி தாலுகா பகுதிகளில் மேகவெடிப்பு பெருமழை பொழிந்தது.

இதில் அந்த தாலுகாவின் பெரும் பகுதிகள் வெள்ளக்காடானது. மலகி-டடியாத் கிராமத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குல்தீப்குமார் என்பவரின் குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி வெள்ளத்தில் மாயமாகினர். மொத்தம் 5 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடம் விரைந்துள்ளனர். பெருமழை சவாலுக்கு இடையில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.


Next Story