தொழில்அதிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது
தொழில்அதிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். தொழில்அதிபர். இவரது மனைவி பேபி தாம்பாக். இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி ராகேஷ் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், ராகேஷ் கொலை வழக்கு தொடர்பாக, அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை வித்யாரண்யபுரா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், பேபி தாம்பாக் மற்றும் பாபு அலி இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி ராகேசுக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் ராகேஷ் கூறியுள்ளார். இதையடுத்து, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் ராகேசை கொலை செய்ய பேபி தாம்பாக், பாபு அலி திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த 6-ந் தேதி ராகேசை கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான 2 பேர் மீதும் வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.