பஞ்சாப்: விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு


பஞ்சாப்: விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்ரூர்,

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் குஜ்ரான் கிராமத்தைச் சேர்ந்த போலா சிங் (50 வயது), நிர்மல் சிங் (42 வயது), பிரத் சிங் (42 வயது), ஜக்ஜித் சிங் (30 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story