ஆந்திராவில் ரூ.5.12 கோடி பறிமுதல்; ஆவணமின்றி சென்னைக்கு எடுத்துவர முயன்றதாக தகவல் - 6 பேர் கைது


ஆந்திராவில் ரூ.5.12 கோடி பறிமுதல்; ஆவணமின்றி சென்னைக்கு எடுத்துவர முயன்றதாக தகவல் - 6 பேர் கைது
x

விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு பணத்தை எடுத்து வர முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 3 கார்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.5.12 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த பணத்தை விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு எடுத்து வர முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.12 கோடியை வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story