பாகேப்பள்ளியில் கிராம தங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அரசு அதிகாரிகளை -சுப்பாரெட்டி எம்.எல்.ஏ கண்டித்துள்ளார்.


பாகேப்பள்ளியில் கிராம தங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அரசு அதிகாரிகளை -சுப்பாரெட்டி  எம்.எல்.ஏ கண்டித்துள்ளார்.
x

பாகேப்பள்ளியில் கிராம தங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அரசு அதிகாரிகளை சுப்பாரெட்டி எம்.எல்.ஏ கண்டித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா யள்ளம்பள்ளி கிராமத்தில் நேற்று கலெக்டரின் கிராம தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் நாகராஜ், பாகேப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. சுப்பாரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சுப்பாரெட்டி எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்கிடையே கிராம தங்கல் நிகழ்ச்சியில் சில அதிகாரிகள் கலந்து கொள்ளாதது சுப்பா ரெட்டி எம்.எல்.ஏ.வின் கவனத்திற்கு வந்தது. இதனை சுப்பா ரெட்டி எம்.எல்.ஏ. கண்டித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:- பா.ஜனதா அரசு செயல்படவில்லை என்று மந்திரி மாதுசாமி கூறியது, கிராம தங்கல் நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் இருந்தது சாட்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சியில் அதிகாரிகள் உரிய முறையில் பணி செய்வதில்லை. அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவது கண்டனத்துக்குறியது என்றார்.


Next Story