வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது
x

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் புகுந்து கொள்ளை

மும்பை மலாடு மேற்கு மாருதி அப்பாட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் அனில் மேத்தா. இவரது மனைவி பிரமிளா(வயது72). கடந்த 7-ந் தேதி மூதாட்டி பிரமிளா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டு யார் என விசாரித்தார். இதில் கூரியர் கம்பெனியில் இருந்து பார்சல் கொண்டு வந்திருப்பதாக வாலிபர் தெரிவித்தார்.

இதனை நம்பிய மூதாட்டி கதவை திறந்த போது வாலிபர் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார். மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி சேலையால் கட்டி போட்டார். பின்னர் வாலிபர் தனது கூட்டாளிகளை அழைத்து வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இது பற்றி அறிந்த அனில் மேத்தா சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

4 பேர் கைது

இந்த புகாரின் படி போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாண்டுப்பை சேர்ந்த சச்சின் சுனில் (வயது27) என்பவரின் அடையாளம் தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். மற்ற கூட்டாளிகள் உத்தரபிரதேசம் தப்பி சென்றது தெரியவந்தது.

போலீஸ் தனிப்படை அங்கு சென்று சித்தார்த் நகர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த அப்சல் அக்ரம் (23), பரக்கத்அலி (18), அப்துல் முனாப் (66) ஆகிய 3 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்களை மும்பை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story