வாலிபரை கொன்றவர் கைது


வாலிபரை கொன்றவர் கைது
x

கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் டெல்லி வாலிபரை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரி மேற்கு ஜே.பி சாலையில் கடந்த மாதம் 24-ந்தேதி நடைபாதையில் ஒருவர் தலையில் பவர்பிளேக் கற்களால் தாக்கப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் மீட்டு நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் டெல்லியை சேர்ந்த சூரஜ் திவாரி (வயது24) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மோனுகுமார் சிங் (22) என அடையாளம் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொன்றதாக தெரியவந்தது.


Next Story