திவா ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி பெண், வாலிபர் பலி


திவா ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி பெண், வாலிபர் பலி
x

திவா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரெயில் விபத்தில் சிக்கி பெண் மற்றும் வாலிபர் பலியாகினர்.

மாவட்ட செய்திகள்

தானே,

திவா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரெயில் விபத்தில் சிக்கி பெண் மற்றும் வாலிபர் பலியாகினர்.

தண்டவாளத்தை கடக்க முயற்சி

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் திவா ரெயில் நிலையம் அருகே இன்று காலை 8.30 மணி அளவில் 2 பெண்கள் மற்றும் வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது பெண் ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட வாலிபர் அப்பெண்ணை மீட்க முயன்றார். அப்போது விரைவு வழித்தடத்தில் வேகமாக வந்த மின்சார ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் மீதும் மோதியது.

இதில் வாலிபர் மற்றும் பெண் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் சென்ற மற்றொரு பெண் தண்டவாளத்தில் விழுந்து படுகாயமடைந்தார்.

2 பேர் பலி

தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியானவர்கள் சசிகாந்த் சாவந்த் (வயது26), கீதா ஷிண்டே (25) என்பது தெரியவந்தது.


Next Story