கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை


கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
x

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை


கடந்த ஆண்டு மார்ச் மாதம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ராஜதானிகோட்டை பஸ் நிறுத்தம் அருகில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அந்த வாகனத்தில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். இந்த வழக்கு போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். முடிவில், பெரிகருப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story