ராணிப்பேட்டையில் 12-ந்தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்


ராணிப்பேட்டையில் 12-ந்தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
x

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்லும் 12 மற்றும் 26-ந் தேதிகளில் (வெள்ளிக்கிழமை) சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story