எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது
x

கோப்புப்படம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் உலகநாதன் (வயது 28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இன்று மாலை, கடலில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு எதிர் மாறாக, இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கைக்கு உட்பட்ட முல்லை தீவு அருகே சென்றதால், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இச்செய்தி கீழக்காசாக்குடி மேட்டை சேர்ந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story